Monday, April 29, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்யூடியூபர் பிராங்ஸ்டர் ராகுல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

    யூடியூபர் பிராங்ஸ்டர் ராகுல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

    யூடியூபர் பிராங்ஸ்டர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    யூடியூப்பில் பலரும் தங்களுக்கென தனி கணக்குகளை வைத்து ஒவ்வொரு வகையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிலர் அதில் பிரபலமானவர்களும் உண்டு. 

    தமிழில் பிராங்க் விடீயோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர் தான்  பிராங்ஸ்டர் ராகுல். இவர் பல விதமான பிராங்க் விடீயோக்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து உள்ளன. இவர் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பிரின்ஸ், ஹிப்ஹாப் ஆதியின் சிவக்குமார் சபதம், ஜிவி பிரகாஷின் பேச்சுலர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

    இந்நிலையில், பிராங்ஸ்டர் ராகுல் வெளியிட்ட வீடியோ ஒன்றில், துணிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தகராறு செய்வது போன்றும், அவர்களிடம் ரவுடி போல அரிவாளை காட்டி மிரட்டுவது போன்றும் அமைந்துள்ளது. 

    இந்நிலையில், இந்த வீடியோவை குறிப்பிட்டு ரோஹித்குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும் அந்த வீடியோ பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    வட மாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை தூரத்தி தூரத்தி அடித்த சம்பவம்..வைரலான வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....