சசிகலாவின் அரசியல் பயணத்தை வெற்றிகரமாக மாற்ற, ஓபிஎஸ் தம்பி கடுமையாக உழைத்து வருகிறார் என்று மதுரையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராக இருந்தவர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா.
அதிமுக-வில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட நிலையில், அவர் ஆன்மீக பயணமாக அண்மையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்றிருந்தார். அங்கு, திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சசிகலாவை, ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா சந்தித்துப் பேசினார். இதனால், கட்சி கோட்பாடுகளுக்கு மாறாக செயல்பட்டதாக கூறி, அவரை அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நீக்கினார்கள்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின், செய்தியாளர்களை சந்தித்த ஓ.ராஜா, “சசிகலா தலைமையில் தான் அதிமுக கட்சி ஒன்றிணைய வேண்டும் என்றும், தன்னை நீக்க ஒபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் அதிகாரம் கிடையாது” என்றார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில், ஓ.ராஜா- சசிகலா சந்திப்பு எந்தவிதமான மாற்றத்தை கட்சியில் ஏற்படுத்தும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதேநேரத்தில், சசிகலாவை கட்சியில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்த ஓபிஎஸ், தனது முடிவில் இருந்து தற்காலிகமாக பின்வாங்கியுள்ளார்.
அதிமுகவை கைப்பற்ற நினைக்கும், சசிகலாவின் எண்ணம் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. அவர், ஆன்மீக அரசியலை தவிர்த்து அதிரடி அரசியலுக்கு வர வேண்டும் என்று, அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, நாகூர் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சசிகலா சென்றார். அப்போது, விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கவிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், வருகிற மே 10ஆம் தேதி மதுரையில் இருந்து, அரசியல் பயணத்தை சசிகலா தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மே 10 அன்று, மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனத்தை முடித்த பின், அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, அரசியல் பயணத்தை தொடங்கும் முடிவை சசிகலா எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா தானாம். மதுரை பயணத்தை முடித்து விட்டு தென் மாவட்டங்கள் சிலவற்றில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சென்னை வரவிருக்கிறாராம் சசிகலா. சென்னையில், மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி மாஜி அமைச்சர்கள், சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என அனைவரை பற்றியும் வெளிப்படையாக பேசி கிழித்தெடுக்கவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செல்லப்பிராணிகள் என்றால் விலங்குகள் மட்டும்தானா? மகிழ்ச்சியை தரும் இவைகளும் உண்டு!