காலக்கட்டம்
தற்போதையக் காலக்கட்டத்தில் மட்டும் அல்லாது அனைத்து விதமான காலக்கட்டத்திலும் முற்போக்குச் சிந்தனை உள்ள திரைப்படங்கள் வெளிவந்த விதம்தான் உள்ளன. ஆனால், சொற்ப எண்ணிக்கையிலேயேதான் அப்படியான திரைப்படங்கள் இருக்கும்.
பல காலக்கட்டத்திலும் வலப்புற கொள்கைகளைச் சார்ந்த திரைப்படங்களும், இடப்புற கொள்கைகளைச் சார்ந்த திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், வலப்புற கொள்கைத் திரைப்படங்கள் அதிக அளவிலும், இடப்புற கொள்கைத் திரைப்படங்கள் குறைந்த பட்சத்திலும் வெளிவந்தன.
தற்போதையக் காலக்கட்டத்திலோ அவை முற்றிலுமாய் மாறிவிட்டது. ஆம்! வலப்புற கொள்கைத் திரைப்படங்கள் வருகிற அதே அளவுக்கு இடப்புற கொள்கைத் திரைப்படங்களும் வெளிவருகின்றன. இச்சூழலானது தற்காலத்திய சினிமாவின் ஆரோக்கியத் தன்மையைக் காட்டுகிறது.
கேரள சர்வதேச திரைப்பட விழா
இப்படியாக வலப்புற இடப்புற திரைப்படங்கள் இருக்க, அவைகளைப் பற்றிய கேள்விகளும் அதிகரித்துவிட்டன. இப்படியான சூழல்கள் நிலவிக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் வருடா வருடம் நடைபெறும் கேரள சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் தொடங்கி அரங்கேற்றப்பட்டு வந்தது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, இவ்விழாவில் கலந்துக்கொண்ட பிரபலங்களிடம் கேள்விகள் கேட்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. அந்நிகழ்வில் கேட்கப்பட்ட திரைப்படங்களுக்குள் நிலவும் கொள்கை ரீதியிலான கேள்விக்கு தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பதிலளித்தார்.
வெற்றிமாறன்
உலகம் பிளவுப்பட்டுள்ளது என்றும் இப்பிளவில் மையம் என்று எதுவும் இல்லை என்றும் வலது மற்றும் இடது பக்கங்களே உள்ளன என்றும், அவ்வாறாக இருப்பின் நீங்கள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துதான் ஆக வேண்டும் எனவும் வெற்றிமாறன் குறிப்பிட்டார். மேலும், நீங்கள் மையம் உள்ளதென்று மையத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் நீங்களும் வலது சாரிகளே என்றார்.
மேலும், வெற்றிமாறன் அவர்கள் அரசியல் சூழல்களின் மாறுதலுக்கு ஏற்ப திரைப்படங்களிலும் மாறுதல் இருக்கும் என்றார்.
வெற்றிமாறனின் இந்த பதிலானது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரலாக மாறி வருகிறது. வெற்றிமாறன் பேசிய காணொளியை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றியும் பகிர்ந்தும் வருகின்றனர்.
தென்னிந்திய திரைப்படச் சூழலில் மிக முக்கியமானவராக பார்க்கப்படும் வெற்றிமாறன் கூறிய இக்கருத்து ஒரு பக்கம் வைரலாக பரவி நன்மதிப்பை பெற்று வந்தாலும் மறுபக்கம் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது.
வெற்றிமாறன் அவர்கள், சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய காதாப்பாத்திரத்திலும் நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் வாடிவாசல் எனும் திரைப்படத்தை வெற்றிமாறன் தற்சமயம் இயக்கி வருகிறார். ரசிகர்கள் விடுதலை திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.