சேஸிங் மன்னன் தோனி என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் புகழ்ந்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் 16-வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கடைசியாக நடந்த மூன்று லீக் போட்டிகளில் சேஸ் செய்த அணிகள் தோல்வியையே தழுவின.
பேட்டர்களுக்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 201 என்ற இலக்கைகூட பெங்களூரு அணியால் சேஸ் செய்ய முடியவில்லை. இதனால் பல்வேறு கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளதாவது;
200-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்யும்போது இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இதனை சேஸிங் மன்னனான மகேந்திர சிங் தோனி பலமுறை செய்து காட்டியுள்ளார். அவர் எப்போதும் ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்வார்.
அவரை பார்த்து மற்ற அணிகளின் பேட்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது உள்ள பேட்டர்கள் 200 ரன்களை 12 அல்லது 13 ஓவர்களில் சேஸ் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினாரா வாஷிங்டன் சுந்தர்?