ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக வாஷிங்டன் சுந்தர் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஐதராபாத் அணிக்கு வாஷிங்கடன் சுந்தரின் விலகல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்று வீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
வாஷிங்டன் சுந்தர் கடைசியாக தில்லி அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 15 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.
வெளியானது, அசோக் செல்வனின் சபாநாயகன் படத்தின் டீசர்!