Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழக பாஜகவினருக்கு ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகம்- பாஜக அண்ணாமலை

    தமிழக பாஜகவினருக்கு ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகம்- பாஜக அண்ணாமலை

    நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தமிழக பாஜகவினருக்கு ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகத்தை அளித்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். பிறகு காணொளி வாயிலாக தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைத்தார். 

    தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக இடையே கடந்த சில நாட்களாகவே வார்த்தை மோதல் காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜே.பி.நட்டாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

    இதுகுறித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

    தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறோம். அவரது வருகை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் தமிழக பா.ஜ.க.வினருக்கு, ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். 

    பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் செல்போன் கொண்டுவரத் தடை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....