Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: 45,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை

    துருக்கி நிலநடுக்கம்: 45,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை

    துருக்கியில் ஏற்பட்ட கொடுரமான நிலநடுக்கத்திற்கு இதுவரை 45,000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் துருக்கியில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைக்கின்றன. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை சிரியா – துருக்கியில் 45,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். இந்தியா சார்பில் இரு குழுவாக மீட்பு படையினர் துருக்கிக்கு விரைந்துள்ளனர். அதேநேரம் சிரியாவுக்கு மருத்துவ குழுக்களை உதவிக்காக இந்தியா அனுப்பியுள்ளது.  

    மேலும், பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 50,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. முன்னதாக, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களுக்கு 3 மாதக்கால அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை மூடுங்கள் – எலான் மஸ்க் அதிரடி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....