கடந்த தேர்தலில் எய்ம்ஸ் செங்கல் வைத்து பிரச்சாரம் செய்தது போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது பிரச்சாரத்தை பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அரங்கில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று புகைப்படக் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் சென்று பார்வையிட்டார்.
அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரர்களுக்கு போதுமான கட்டமைப்புகள் தமிழகத்தில் இருப்பதாகவும், விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விளையாட்டுத்துறை செயலாளரிடம் பேசி இருப்பதாகவும் கூறினார்.
மேலும் அனைத்து விளையாட்டுகளுக்கு போதுமான பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்காததைக் கண்டித்து கடந்த தேர்தலில் செங்கலை காட்டி பிரச்சாரம் செய்ததாகவும், மீண்டும் அதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவேனா என பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தெரிவித்தார்.
தன்னுடைய பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சி இருந்ததாகவும், தன்னுடைய புகைப்படங்கள் இருந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், புகைப்பட கலைஞர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பணியைத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இளைஞர் வெட்டிக்கொலை; ராமநாதபுரத்தில் பரபரப்பு!