இந்தியா – நியூசிலாந்து அணிக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிவிட்டது. இருப்பினும், இன்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வொயிட் வாஷ் செய்யும் நோக்கத்தில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், நியூசிலாந்து அணி வொயிட் வாஷை தவிர்க்கும் நோக்கில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 1.30 மணியளவில் போட்டித் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் வாயில் வடை சுடும் அண்ணாமலை! போட்டிக்கு அழைக்கும் மாணிக்கம் தாகூர்