பொங்கல் திருநாளையொட்டி, வருகிற 16 ஆம் தேதி வரை திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை திரையரங்குகளில் திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
இரு திரைப்படங்களின் ரிலீஸை முன்னிட்டு, தமிழகம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகும் பல இடங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. திரையிடப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில், வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு ஜனவரி 13 முதல் 16 வரை அனுமதியில்லை என்று திரைத்துறை இணை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இந்த அறிக்கையானது, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல திரையரங்குகள் 16-ஆம் தேதி வரை அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்திருந்தன.
இதைத்தொடர்ந்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் அதிகாலை காட்சி வேண்டுமென்ற கோரிக்கை தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கல் திருநாளையொட்டி, வருகிற 16 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.
ரோஹித் சர்மா செய்த செயல்; பாராட்டுகளை தெரிவிக்கும் நெட்டிசன்கள்!