Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுரோஹித் சர்மா செய்த செயல்; பாராட்டுகளை தெரிவிக்கும் நெட்டிசன்கள்!

    ரோஹித் சர்மா செய்த செயல்; பாராட்டுகளை தெரிவிக்கும் நெட்டிசன்கள்!

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா செய்த செயலால் அவருக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது. 

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடி வருகிறது. 

    இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் தொடங்கியது. 

    இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. விராட் கோலியின் சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 373 ரன்கள் சேர்த்தது. 

    374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் ஷனகா 88 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து அசத்தினார். 

    இந்தப் போட்டியின் கடைசி ஓவரில், அந்த அணியின் கேப்டன் ஷனகா 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரை பந்துவீச்சு முனையில் ரன் அவுட் செய்தார் பந்துவீச்சாளர் ஷமி. இந்த ரன் அவுட் குறித்த உறுதித்தன்மையை அறிய  மூன்றாம் நடுவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. 

    அப்போது, மூன்றாம் நடுவர் இதுகுறித்த முடிவை அறிவிக்கும் முன்பு அப்பீலை திரும்பப் பெற்றுக்கொண்டார் ரோஹித் சர்மா. இந்திய அணியின் வெற்றி அப்போது உறுதியாகியிருந்ததாலும் இந்த முடிவை மேற்கொண்டார் ரோஹித் சர்மா. ஷனகா 98 ரன்களில் இருந்தார். இதுபோல அவரை அவுட் செய்ய விரும்பவில்லை எனத் தெரிவித்தார் ரோஹித் சர்மா. 

    இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மாவுக்கு பல்வேறு தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். 

    ‘என் மனைவி கோபமாக இருக்கிறாள்..விடுமுறை வேண்டும்’ – காவலர் எழுதிய விடுப்பு கடிதம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....