மூன்று ஆண்டுகளாக வெளியில் வராமல் இருட்டு வீட்டில் வசித்தவர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர்கள், திருப்பார் செட்டி என்பவர். அவருக்கு விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணவேனி என்ற இரு சகோதரிகள் உள்ளனர். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகள் முறையே தந்தையும், தாயும் இறந்ததால், அவர்களுக்கு மனசிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து 2019-ம் ஆண்டிலிருந்து திருப்பால் செட்டியும், அவரது இரு சகோதரிகளும் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளனர். திருப்பால் செட்டி மட்டும் அவ்வப்போது வெளியில் வந்து தேவையான பொருள்களை வாங்கி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பேருந்து எண்ணால் ஏற்பட்ட விபரீதம் – சித்திகளின் ஆத்திரத்தால் பறிபோன உயிர்
சமீபத்தில் மின்சார கட்டணம் செலுத்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மூவரும் இருளில் வாழ்ந்துள்ளனர். என்னாதன் இந்த வீட்டில் நடக்கிறது என்று அக்கம் பக்கத்தினர் திருப்பால் செட்டி வீட்டிற்குள் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்தனர்.
அப்போது, அங்கு மிகவும் அலங்கோலமான நிலையில் அனைத்தும் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மிகுந்த சிரமத்திற்கு பின் அவர்கள் மூன்று பேரையும் குண்டு கட்டாக தூக்கி வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் மூன்று பேருக்கும் அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.