கோவை அருகே குப்பைத்தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் கை மீட்கப்பட்டுள்ளது.
கோவை துடியலூர் அருகே உள்ள பகுதிதான் வெள்ளக்கிணர். இந்தப் பகுதியில் உள்ள வி.கே.எஸ் நகர் பகுதியில் எப்போதும் போல நேற்று(செப்டம்பர்-15) காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனம் மூலம் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளது. என்னவென்று பார்க்க அந்த பையில் இரண்டு துண்டுகளாக ஆணின் கை இருந்துள்ளன.
இதைக்கண்ட தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாது, துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் விரைந்து வந்தனர். தற்போது இந்நிகழ்வு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.