ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வரும் இச்சமயத்தில், நேற்று ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்க்க, அடுத்து பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இருக்கைகள் மற்றும் பொருள்களை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். மேலும், மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மீது இருக்கைகளை கொண்டு தாக்கியதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து, இரு தரப்பினரும் மைதானத்திற்கு வெளியே சாலைகளில் மோதிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலரை அடையாளம் கண்டுள்ள ஷார்ஜா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, அகமது வீசிய பந்தில் அலி சிக்ஸர் விளாசிய பிறகு அவரை சீண்டினார். அதற்குப் பதிலாகவே தனது பௌலிங்கில் அலி வீழ்ந்ததும் அகமது அவரைச் சீண்டினார்.
இந்நிலையில் இந்த நிகழ்வுகளெல்லாம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வெற்றி பெற்ற பாகிஸ்தான்.. தொடரை விட்டு வெளியேறிய இந்தியா…