கேரளாவில் ஓடிக்கொண்டிருந்த பள்ளி பேருந்தில் இருந்து விழுந்த குழந்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம், ஆலுவாயில் நேற்று (செப்டம்பர் 2) பள்ளி நேரம் முடிந்ததும், குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அதில் இருந்து திடீரென எமர்ஜென்சி எக்ஸிட்ஸ் கதவு தானாக திறக்க , அதன் வழியாக ஒரு குழந்தை கீழே விழுந்துள்ளது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு படி ,அந்தக் குழந்தையை காப்பாற்ற ஓடியுள்ளனர் .இதைப்பார்த்த பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரும் உடனடியாக பிரேக்கை அழுத்த ,அந்த இடத்தில் நடக்க இருந்த பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு ,சிறு காயத்தோடு மட்டும் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
பிறகு அந்த பள்ளியின் பேருந்திலேயே ,மீண்டும் குழந்தை ஏற்றப்பட்டு ,பத்திரமாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .ஆனால் ,இப்படி ஒரு சம்பவம் நடந்ததை சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களிடம் சொல்லாமல் பள்ளி நிர்வாகம் மறைத்துள்ளது .
இதனையடுத்து குழந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதுதான் ,விபத்து குறித்த தகவல்கள் பெற்றோர்களுக்கு தெரிய வந்து ,பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறையில் புகார் அளித்ததுள்ளனர் . பெற்றோரின் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ,விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதையும் படிங்க : குறைபிரசவ குழந்தையை மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த டாக்டர் – அதிர்ச்சி சம்பவம்