துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணிதொடங்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது. இதுவரையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரித்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், இந்நிலநடுக்கத்தால் முடுக்கவிடப்பட்ட மீட்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கட்டிடங்களை தகர்க்கும் பணிகள் துருக்கியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணியில் துருக்கியில் மட்டும் பல்வேறு பகுதிகளில் ஒருலட்சத்து 60 ஆயிரம் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின.
இந்நிலையில், துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணிதொடங்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான டெண்டர்கள், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘என் கடினமான நாட்களில் தோனி மட்டுமேதான் என்னை தொடர்புக்கொண்டார்’ – விராட் கோலி உருக்கம்!