நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை தாக்கும் காணொளி கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் காவல்துறையினர், 4 பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 4 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அந்தக் காணொளியில், நான்கு பெண்கள் குடிபோதையில் இருப்பது போன்றும், அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு பெண்ணை குறிவைத்தும் தாக்குகின்றனர். மேலும் அப்பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்தும், முகத்தில் அடித்தும், கால்களால் எட்டி உதைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை வேடிக்கை பார்த்தவாறு இருந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இந்தூரில் பூச்சி மருந்து அக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் ஆவார். பிறகு இந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை அவர்கள் எதற்காக அடித்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் புகாரில் அந்தப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், ஆபாசமான செயல், வேண்டுமென்றே பிறரை காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விடியோவாக பதிவு செய்த இந்தச் சம்பவத்தின் போது அருகில் இருந்தவர்கள் யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்ற வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
उड़ता इंदौर.. नशे में धुत्त लड़कियों का पब के बाहर मारपीट का वायरल वीडियो @IndoreCollector @hariips @drnarottammisra pic.twitter.com/jcSKohDEve
— Brajesh Rajput (@brajeshabpnews) November 7, 2022
இதையும் படிங்க: மோர்பி பால விபத்து; தாமாக முன்வந்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்