மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் கொடூரத்தை செய்த அந்த பள்ளியின் வேன் டிரைவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் சிறு குழந்தைகளுக்கான “கிண்டர் கார்டன்” முறையில் செயல்பட்டுவரும் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலும் அனைத்து குழந்தைகளும் பள்ளியின் வாகனத்திலேயே பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
வழக்கம் போல சிறுமியின் தாயார் மாலை தனது குழந்தையின் வருகைக்காக காத்திருந்தார். ஆனால் வாகனமானது 15 நிமிடம் தாமதமாக வந்துள்ளது . மேலும் அந்த குழந்தை வழக்கத்தை விட மிகவும் சோர்வாக காணப்பட்டது. காலை தான் போட்டு அனுப்பிய துணி மாற்றப்பட்டு சிறுமியின் மாற்று துணி அணிவிக்கப்பட்டு இருப்பதை கண்டு, சந்தேகம் அடைந்த தாயார் சிறுமியிடம் விசாரித்தார். அப்போது அனைத்தையும் தனது தாயாரிடம் தெரிவித்தாள் அந்த சிறுமி. அதை கேட்ட அந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்து தனது கணவருக்கு தகவல் தெரிவிக்க அவர் விரைந்து வந்து சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர் .
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் கொடூரம் நடந்திருப்பதை உறுதி செய்தனர். உடனே பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி அந்த பள்ளி வாகனத்தின் டிரைவரை அடையாளம் காட்டியுள்ளார். அவரை விசாரித்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளி வாகனத்தில் வைத்தே சிறுமியிடம் பாலியல் கொடூரத்தை செய்ததாகவும், அந்த வாகனத்தின் உதவியாளர் அதற்கு உடந்தையாக இருந்ததாவும் தெரிவித்தார். மேலும் அந்த உதவியாளர் ஒரு பெண் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனே போலீசார் இருவரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்கின்ற நிலை இந்தியாவில் தொடந்து நடந்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சியாளர்கள் கவனிப்பார்களா?