புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இன்று குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய தொற்று பாதிப்பு 1,604 ஆக இருந்த நிலையில், இன்று சற்று குறைந்து 1,326 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும்.
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,53,592 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 17,912 ஆக உள்ளது.
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 08 பேர் உயிரிழந்ததை அடுத்து , இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,29,024 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,723 – ஆக உள்ள நிலையில் , தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,06,656 ஆக அதிகரித்துள்ளது .
கடந்த 24மணி நேரத்தில் 25,433 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .இதனால், தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 219.63 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோமாளி அரசியல்வாதி அண்ணாமலை: கடுமையாக விமர்ச்சித்த திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி