Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் இன்று புதிதாக 1,321 பேருக்கு உறுதியான தொற்று…

    இந்தியாவில் இன்று புதிதாக 1,321 பேருக்கு உறுதியான தொற்று…

    புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இன்று குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 1,321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் நேற்றைய முன்தின பாதிப்பு 1,046 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்து1,190 ஆக பதிவானது.இந்நிலையில் இன்றைய பாதிப்பானது நேற்றைய பாதிப்பை விட அதிகரித்து 1,321-ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (நவம்பர் 03) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகமாகும்.

    இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,57,149 ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 16,098 ஆக உள்ளது.

    இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 09 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,461 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று கொரோனா தோற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,457 – ஆக உள்ள நிலையில் , தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,10,590 ஆக அதிகரித்துள்ளது .

    நேற்று ஒரு நாளில் மட்டும் 1,64,567 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .இதனால், தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 2,19,67,80,694 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..! காத்திருக்கும் ரசிகர்களுக்கு இப்பாடல் விருந்தளிக்குமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....