Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் மீது ஏறிய இளைஞர்.. தூக்கி வீசிய மின்சாரம்.. பரமக்குடியில் நடந்த பதற வைக்கும் சம்பவம்

    ரயில் மீது ஏறிய இளைஞர்.. தூக்கி வீசிய மின்சாரம்.. பரமக்குடியில் நடந்த பதற வைக்கும் சம்பவம்

    ராமநாதபுரத்தில் நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவேந்தலுக்கு வந்த  இளைஞர் ஒருவர், ரயில் மீது ஏறி கொடி அசைத்தபோது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாரின் 65-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு குழுவினர் ரயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது தேவகோட்டை பணிப்புலான் வயல் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர், அங்கு நின்று கொண்டிருந்த திருச்சி- ராமேஸ்வரம் ரயில் மீது ஏறி கொடி அசைக்க முயன்றார்.

    அப்போது அவர் கையிலிருந்த கொடி மின் கம்பி மீது பட்டதும், அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில், முகேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....