4 பெண் காவலர்கள் பணியில் இருக்கும்போது சினிமா பாடலுக்கு நடனமாடி, அதை பசமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் இந்து மத கடவுளான ராமருக்கு வழிபாட்டு தளம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் குறிப்பாக ராம ஜென்மபூமி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண் காவலர்கள் தங்களின் பணியின்போது போஜ்புரி என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.
3 பெண் காவலர்கள் நடமாடியதை, மற்றொரு பெண் காவலர் தனது போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அதன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதும், 4 பெண் காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
#VideoReel बनाने पर महिला। पुलिसकर्मी सस्पेंड। #राममंदिर की सुरक्षा ड्यूटी पर तैनात थीं #UPPolice की जवान। क्या #बाबा रील बनाते पकड़े गए तो उन्हें भी सस्पेंड किया जाएगा?#Ayodhya #RamMandir pic.twitter.com/tKPJY4Ip1p
— Article19 India (डिजिटल जुबान) (@Article19_India) December 15, 2022
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் களைகட்டபோகும் கலைத்திருவிழா!