Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட கொடூரம்

    மகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட கொடூரம்

    சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளிவந்திருந்த நிலையில், தற்போது தற்கொலை என தகவல் வந்துள்ளது. 

    சென்னை கிண்டிக்கு அருகில் உள்ள பகுதிதான் ஆதம்பாக்கம். இப்பகுதியைச் சேர்ந்த சதீஷிற்கு வயது 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான சத்தியா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். 

    இருவரும் வழக்கம்போல் ஆதம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு அதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. 

    இதையடுத்து, அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன் மாணவி சத்தியாவை, சதீஷ் தள்ளவிட்டதாக கூறப்படுகிறது. ரயிலில் சிக்கிய சத்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீவிர தேடுதலுக்குப் பின் தலைமறைவான சதிஷ் கைது செய்யப்பட்டார்.

    இதனிடையே நடைபெற்ற விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் தலைமைக் காவலராக பணியாற்றி வருவதும், கைது செய்யப்பட்டுள்ள சதிஷ் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பதும் தெரிய வந்தது. இதன்பிறகு, உயிரிழந்த மாணவி சத்தியாவின் தந்தை மாணிக்கத்திடம் விசாரணை நடைபெற்று வந்தது.

    மகள் சத்தியா கொலை செய்யப்பட்டதால் தந்தை மாணிக்கம் மனமுடைந்துள்ளார். இச்சூழலில் மாணிக்கத்துக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மகள் சத்தியாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தந்தை மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கொடுர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....