Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமனைவி முன் துப்பாக்கியை நீட்டிய கணவன் தலைமறைவு; விருதுநகரில் பயங்கரம்

    மனைவி முன் துப்பாக்கியை நீட்டிய கணவன் தலைமறைவு; விருதுநகரில் பயங்கரம்

    விருதுநகரில் மனைவியை துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றுவிடுவதாக கொலைமிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸ் தேடி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமம்தான் கீழூர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன். இவரது மனைவி தங்கம். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு சமீபத்தில் தம்பதியினர் கடன் வாங்கி திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

    ஆபிரகாம் லிங்கன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனக்கு பென்சன் வந்ததும் அந்தத் தொகையை தங்கத்திற்கு கொடுத்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆபிரகாம் லிங்கன் தங்கம் அந்தப் பணத்தில் கடனையும் அடைத்து, வீட்டுச் செலவையும் செய்வார். இந்நிலையில் இந்த மாத பென்சனில் 3000 ரூபாய் மது குடித்தே தீர்த்து இருக்கிறார் லிங்கன்.

    இதனால் ஆத்திரமடைந்த தங்கம் லிங்கனை கண்டித்துள்ளார். இதனிடையே குறைவாகக் கொடுத்த பென்சன் பணத்தில் இருந்து ஆபிரமாலிங்கன் மேலும், பணம் கேட்டுத் தகராறு செய்தார். இதை தங்கம் கண்டிக்கவே உடனே வீட்டில் இருந்த தன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்றுவிடுவதாக கொலைமிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தங்கம் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மனைவி புகார் கொடுத்திருப்பது தெரிந்ததும் முன்னாள் ராணுவ வீரர் ஆபிரகாம் லிங்கன் தலைமறைவாகிவிட்டார். தற்போது அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆபிரகாம் லிங்கன் வீட்டில் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....