நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படமும், நடிகர் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படமும் ஒரேநாளில் வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில், சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி..வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்களாகிய செல்வராகவன் மற்றும் தனுஷ் நாயகர்களாக நடித்துள்ள திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியாகவுள்ளது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் தனுஷ் முதன்முதலாக செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்கா, பான் மசாலா தடை உத்தரவு ரத்து; மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு