Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புரோ கபடி: முதல்முறையாக பிளேஆஃப் முன்னேறிய தமிழ் தலைவாஸ்.. சாதிக்குமா?

    புரோ கபடி: முதல்முறையாக பிளேஆஃப் முன்னேறிய தமிழ் தலைவாஸ்.. சாதிக்குமா?

    இன்று நடைபெறும் பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் உ.பி. யோதாஸ் அணியை எதிர்கொள்கிறது. 

    புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்றன. இந்த அணிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. அதன்படி, லீக் முடிவில் முதல் இரு இடங்களை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் பிடித்தன. இதன் மூலம், இரு அணிகளும் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றன. 

    இந்நிலையில், இந்த அணிகளைத் தொடர்ந்து 3-வது இடத்தை பெங்களூரு புல்சும், 4-வது இடத்தை உ.பி. யோத்தாஸும், 5-வது இடத்தை தமிழ் தலைவாசும், 6-வது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லியும் பிடித்தன. இதன் மூலம் இந்த 4 அணிகளும் தற்போது பிளே ஆஃப் சுற்றில் விளையாடவுள்ளன. 

    இன்று நடைபெறும் பிளே ஆஃப் சுற்றில் இரு ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. இதில் பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. அதேபோல, தமிழ் தலைவாஸ் உ.பி. யோதாஸ் அணியை எதிர்கொள்கிறது. 

    தமிழ் தலைவாஸ் லீக் கட்டத்தின் முடிவில் 66 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், தொடரில் முதல் முறையாக பிளேஆஃப் முன்னேறியுள்ளது. இதனால், தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    கோல்டன் குளோப் விருதில் ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....