Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவிலிருந்து 'இஸட்' பிரிவுக்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு

    அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவிலிருந்து ‘இஸட்’ பிரிவுக்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘இஸட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்ட்டுகள் மற்றும் மத தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வருவதன் காரணமாக உள்துறை அமைச்சகம் இந்த இஸட் பிரிவு பாதுகாப்பு அண்ணாமலைக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    அதன்படி, அண்ணாமலைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பில் இருந்து இஸட் பிரிவு பாதுகாப்பிற்கு உயர்த்தப்படுகிறது. இந்தப் பிரிவின் கீழ் 20-க்கும் மேற்பட்ட காமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலையின் வீடும், அவர் தங்கும் இடமும், அவர் செல்லும் இடங்களிலும் 24 மணி நேரமும் காமண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். 

    இதன்படி 2 நாட்கள் மத்திய உள்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலையின் வீட்டிற்கு வந்து சோதனை செய்து சென்றுள்ளனர். மேலும் இதற்கான ஒப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. 

    திமுக எம்.பி மஸ்தான் கொலை வழக்கு; அவரது சகோதரனை கைது செய்த காவல்துறை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....