Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர்கள் இங்கு வரக்கூடாது -டி ஜெயக்குமார் அதிரடி

    அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர்கள் இங்கு வரக்கூடாது -டி ஜெயக்குமார் அதிரடி

    அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார்.

    அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த பின்பு,

    செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    அதிமுகவின் கோயிலான தலைமை அலுவலகத்தை சூறையாடி, சேதப்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், அதிமுக அலுவலகத்திற்கு வருவதற்கு ஓபிஎஸ்-க்கு எந்த முகாந்திரமும் இல்லை.

    ஓபிஎஸ் வருகை என்பது சட்டவிரோதம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

    அதிமுகவின் தொண்டர்கள் ஒருவர் கூட திமுகவிற்கு செல்ல மாட்டார்கள். வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள். ஓபிஎஸ் கட்சியின் பெயரை பயன்படுத்துவது தவறு.

    அவர் அதிமுகவின் உறுப்பினர் கூட இல்லை. இவ்வாறு, ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....