“என் பெயரில் வரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்” என திருச்சிற்றம்பலத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில வெளியான யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மிதர்ன் ஜவஹர் தனுஷை வைத்து மீண்டும் இயக்கிய திரைப்படம், திருச்சிற்றம்பலம். கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால், அவரின் அடுத்த திரைப்படம் குறித்த கேள்விகள் தொடர்ந்து இணையத்தில் சுற்றின.
அதன் ஒருபகுதியாக, சமீபத்தில் மித்ரன் ஜவஹர் பெரிய பிரபலங்களுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இதை மித்ரன் ஜவஹர் மறுத்துள்ளார்.
மேலும், “திருசிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன். வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் தொடரும் பணி நீக்கம்.. இந்த ஆண்டும் அதிர்ச்சி