பாலியல் வன்கொடுமை புகாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரருக்கு ஜனவரி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கை வீரர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2-ஆம் தேதி 29 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்கா குணதிலகா மீது புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, இலங்கை அணியின் வீரர் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சிட்னி காவல்துறையினர் கைது செய்தனர்.
இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறாததால், அந்த அணியினர் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். தனுஷ்கா குணதிலகா கைதாகியுள்ளதால், அவர் மட்டுமின்றி இலங்கை அணி நாடு திரும்பியது.
இந்நிலையில், பாலியல் புகாரில் கைதான தனுஷ்கா மீதான புகார் தற்போது நிரூபனமாகியுள்ளது. ஆதலால், தனுஷ்கா குணதிலகா ஜனவரி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனுஷ்கா குணதிலகா முறையிட்ட ஜாமீன் மனுவை அந்நாட்டின் பாரமட்டா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.
மேலும், தனுஷ்கா குணதிலகா மீதான பாலியல் புகார் நிரூபணம் ஆனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாத்தியாரே இப்படியா ? பள்ளிக்குள் பட்டா கத்தியுடன் வளம் வந்த ஆசிரியர்! அதிர்ச்சி வீடியோ