Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் ! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

    கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் ! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

    acid attack case study

    காதலிக்க மறுத்ததால் சொந்த தாய் மாமனே சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது .

    ஆந்திரா மாநிலம், பொட்டி ஸ்ரீராமுலு மாவட்டத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு பள்ளி மாணவி, பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றிருந்ததால் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது தாய்மாமா நாகராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். தனியாக இருக்கும் போது வீட்டிற்குள் வரும் மாமாவை கவனித்த சிறுமி சற்று பதற்றமாகி ஓடி ஒழிய முற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    அப்போது சிறுமியை மறித்து தன்னை காதலிக்கும் படி நாகராஜ் கூறவே, அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நகராஜிற்கு, தன் சகோதரியின் குடும்பத்தோடு நிறைய மன கசப்புகளும் பிரச்சனைகளும் இருந்து வந்த நிலையில், அந்த சிறுமியும் காதலிக்க மறுப்பு சொல்கிறாள் என்ற ஆத்திரத்தில் அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

    இதனால் பதறிப்போன சிறுமி எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட, ஆத்திரமடைந்த நாகராஜ் சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றியதோடு அங்கிருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்.

    பின்னர் சிறுமியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வர நாகராஜ் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரை சுற்றி இருந்தவர்கள் வளைத்து பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். அதோடு அங்கு ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியையும் மீட்ட அப்பகுதி மக்கள் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    தற்போது அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகராஜ் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். காதலுக்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி மீது சொந்த தாய் மாமனே ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க : அறுந்து விழுந்த ராட்டினம்.. தூக்கி வீசப்பட்ட 50 பேர் – பதற வைக்கும் காட்சிகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....