Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய ராணுவ முகாமில் தற்கொலைப்படைத் தாக்குதல்; மூன்று பேர் பலி

    இந்திய ராணுவ முகாமில் தற்கொலைப்படைத் தாக்குதல்; மூன்று பேர் பலி

    ஜம்மு-காஷ்மீர் அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    ஜம்மு – காஷ்மீர் ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாமில் இன்று (ஆகஸ்ட் 11) அதிகாலை புகுந்த பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இந்தத் தாக்குதலில், மூன்று இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில், ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டனர். 

    இந்நிலையில், அசம்பாவிதம் நடைபெற்ற பகுதியில் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....