கோவையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செய்றகுழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் அவர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை
இதுமட்டுமல்லாது, பொள்ளாச்சி பா.ஜ.க பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசியிருக்கின்றனர். முக்கிய பிரமுகர்களின் வாகனங்களையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். மேலும், பா.ஜ.க பிரமுகர்கள் மூன்று பேருக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவங்களால், கோவை மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, 100-க்கும் மேற்பட்ட அதிவிரைவு காவல் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர்.