ராட்டினம் கிளம்பிய வேகத்தில் 50 அடி உயரத்துக்கு மேலே சென்றதும் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 50 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள தசரா மைதானத்தில் கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கண்காட்சியில் மக்கள் குதூகலிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் ராட்சத ராட்டினமும் ஒன்று. இந்த ராட்டினம் கீழ் இருந்து மேலே செல்லும் தகவமைப்பை உடையது.
இந்த ராட்டினத்தில் ஏறி குதூகலிக்க நேற்று மக்கள் ஆர்வமுடன் அமர்ந்திருந்தனர். அந்நேரத்தில், அந்த ராட்டினம் கிளம்பிய வேகத்தில் 50 அடி உயரத்துக்கு மேலே சென்றதும் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் ராட்டினத்தில் இருந்த குழந்தைகள் உள்பட 50 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
A spinning swing fell down abruptly in Mohali, Punjab, greviously injuring several people, including children.
Who is responsible for this mishap @BhagwantMann?? How did the authorities give the necessary permissions without safety measures in place?? pic.twitter.com/PrVyAp4M0c
— Priti Gandhi – प्रीति गांधी (@MrsGandhi) September 4, 2022
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விபத்துக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் கடைபிடிக்கப்படவில்லை எனவும், அதனாலயே இந்த விபத்து நேர்ந்ததாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.