சென்னையில் இன்று காலை 10.15 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக உறுதிபடுத்தாத தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களில் இமாச்சல பிரதேசம், உத்தராகாண்ட், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் போன்ற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் இன்று காலை 10.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த நிலநடுக்கம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், தனியார் நிறுவனத்துக்கு அருகில் ‘போர்’ போடும் பணி நடைபெற்றதால், அங்கு அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், அதை நிலநடுக்கம் என ஊழியர்கள் தவறாக நினைத்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
‘உத்தராகாண்டில் எந்நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம்’ – விஞ்ஞானி எச்சரிக்கை!