தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் தொடங்கியது. காவல்துறையின் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ‘காளி’ பட சர்ச்சையில் சிக்கிய லீனா மணிமேகலை இயக்கும் படம்; நாயகி யார் தெரியுமா?
இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட @EPSTamilNadu உள்ளிட்ட அதிமுகவினர் கைது…@ADMKofficial@Admkitwing#admk #admkprotest #eps #OPS #TNAssembly pic.twitter.com/K2OiUSOp6G
— Keerthivasan_journo (@keerthiraina747) October 19, 2022
இதையும் படிங்க: துணிந்த காவல்துறை…கிடைத்த ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்