Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சோனியா காந்தி வீட்டில் இன்னொருவருக்கும் கொரோனா தொற்றா?

    சோனியா காந்தி வீட்டில் இன்னொருவருக்கும் கொரோனா தொற்றா?

    இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4,000-ஐக் கடந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்திக்கும் கொரோனா வைரஸ்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசியல் தொடர்பான அனைத்து வித நிகழ்ச்சிகளையும் அவர் இரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் சோனியா காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நேரத்தில், பிரியங்கா காந்தி லக்னோவில் இருந்தார். அம்மாவான சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்ததும், தன்னுடைய லக்னோ பயணத்தை ரத்து செய்து விட்டு, உடனடியாக டெல்லிக்கு திரும்பினார். இந்த நிலையில், பிரியங்கா காந்திக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    அடுத்தடுத்த நாட்களில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகளான பிரியங்கா காந்தி ஆகிய இரு‌வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சோனியா மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், விரைவில் குணமடைவார்கள் என்றும், குணமடைந்த பிறகு இருவரும் கட்சிப்பணி ஆற்றுவார்கள் என்றும் கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

    கொரோனா பாதித்த பிறகு பிரியங்கா காந்தி கூறுகையில், எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், லேசான கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆகையால், நான் கடைபிடிக்க வேண்டிய அனைத்து விதமான வழிமுறைகளையும் பின்பற்றி, என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    பிரியங்கா காந்தியும், சோனியா காந்தியைப் போல் ஏற்கனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி பெற்ற ஜானி டெப்.. திரையுலகிற்கு திரும்புவாரா??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....