Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் மேலும் 6 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்

    தமிழகத்தில் மேலும் 6 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்

    தமிழகத்தில் மேலும் 6 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

    ஈரான் நாட்டில் உள்ள கரீபியன் கடற்பகுதியில் உள்ள ராம்சர் எனும் நகரில், 1971-ம் ஆண்டு ராம்சர் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்பது சதுப்புநிலங்களை பராமரிப்பது ஆகும். ஆதலால், ராம்சர் பட்டியலில் இணையும் பகுதிகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 13 சதுப்பு நிலங்களை ராம்சர் தளங்களாக அறிவிக்க மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் ராம்சர் பட்டியலில் 3 தமிழக சதுப்பு நிலப்பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள், தமிழகத்தில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் சதுப்புநிலம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம் ஆகியவை இடம்பெற்றன. 

    மேலும், கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் மற்றும் உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகிய சதுப்பு நிலங்கள் ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று (ஆகஸ்ட் 3) தெரிவித்துள்ளார். 

    இதன்மூலம், தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள ராம்சர் சதுப்பு நிலங்கள், கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம், பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் சதுப்புநிலம், கரிக்கிளி பறவைகள் காப்பகம் மற்றும் கோடியக்கரை வனஉயிரின காப்பகம்.

    தமிழகத்துக்கு ராம்சர் அங்கீகாரம்; ‘மகிழ்ச்சி’ என பதிவிட்ட மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....