Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமனைவி இறந்த துக்கம்; கணவர் செய்த செயல் - ஆவடியில் உணர்ச்சிகர சம்பவம்!

    மனைவி இறந்த துக்கம்; கணவர் செய்த செயல் – ஆவடியில் உணர்ச்சிகர சம்பவம்!

    ஆவடியில் உடல்நலக் குறைவு காரணமாக, மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆவடி, பக்தவச்சலபுரம், ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன். இவருக்கு வயது 77. இவரது மனைவி சரஸ்வதி. இவருக்கு வயது 65. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களது வீட்டின் அருகே மகன் தணிகைவேல்(35) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 

    இதனிடையே சரஸ்வதி உடல்நலக் குறைவு காரணமாக தண்டலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு கடந்த வாரம் அவர் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு சரஸ்வதி உயிரிழந்தார். இதனைப் பார்த்த மனமுடைந்த முத்துவீரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

    இதையடுத்து மறுநாள் காலை பெற்றோரின் வீட்டுக்கு வந்த தணிகைவேல், அங்கு பெற்றோர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    இந்தத் தகவல் அறிந்து வந்த ஆவடி காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியாரின் ஆத்மா ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை மன்னிக்காது- அதிமுக தம்பிதுரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....