Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் சென்னையில் மறைவு; தலைவர்கள் இரங்கல்

    பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் சென்னையில் மறைவு; தலைவர்கள் இரங்கல்

    பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது மூப்பு காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று (அக்டோபர் 10) காலமானார். 

    பிரபல வில்லிசை கலைஞரான சுப்பு ஆறுமுகம், 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். இவர் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். 

    இதையும் படிங்க: ரஜினியை நேரில் சந்தித்த பெரிய பழவேட்டரையர்! வைரலாகும் புகைப்படங்களும், பின்னணியும்

    இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தனது வில்லுப்பாட்டின் வாயிலாக மக்களை கவர்ந்தவர். 

    இவர் வில்லுப்பாட்டு கலையை மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் சுப்பையா பிள்ளை போன்றவர்களிடம் கற்றார். 1975 ஆம்  ஆண்டு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார். மேலும் இவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை  2021 ஆம் ஆண்டு வழங்கி அரசு கௌரவித்தது. 

    இந்நிலையில், சுப்பு ஆறுமுகம் வயது மூப்பு காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று (அக்டோபர் 10) காலமானார். இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....