ரன்பீர் கபூர், செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் மொபைலை தூக்கி எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர், ரன்பீர் கபூர். இவருக்கு இந்திய முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து, இவரது நடிப்பில் வெளியாகவுள்ள ‘தூ ஜூதி மெயின் மக்கார்’ படத்தின் டிரெய்லர் வெளிவந்து தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ரன்பீர் கபூர் செய்துள்ள செயல் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரன்பீர் கபூருடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். ரன்பீரும் ஆரம்பத்தில் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க, இரண்டு, மூன்று முறை க்ளிக் செய்தும் புகைப்படம் விழாத காரணத்தால், தனது மொபைலை ரசிகர் பரிசோதித்து பார்த்துள்ளார். அந்நேரத்தில் அந்த மொபைலைக் கேட்கும் ரன்பீர் கபூர் அதை வாங்கி தூக்கி எறிந்துள்ளார்.
What just happened here!? 🤔#RanbirKapoor #Viral pic.twitter.com/oHjJdSINfP
— Trendulkar (@Trendulkar) January 27, 2023
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ரன்பீர் கபூரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ட்விட்டரில் ஆங்கிரி ரன்பீர் கபூர்’ (#angryranbirkapoor) என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.
தொடர் சரிவில் அதானி குழுமம்..அதிகளவில் பங்குகள் வீழ்ச்சி!