சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.
கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் முடிவடைந்து, நாக்-அவுட் சுற்றுகள் ஆரம்பித்துள்ளன.
இந்த சுற்றில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ விளையாடவில்லை. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.
இருப்பினும், விறுவிறுப்புடனே ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் 17-ஆவது நிமிடத்தில், போர்ச்சுகல் வீரர் கோன்கலோ ராமோஸ் தனது அணியின் கோல் கணக்கை ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து, 51-ஆவது நிமிடம் மற்றும் 67-ஆவது நிமிடத்தில் கோல்களை அடித்து கோன்கலோ ராமோஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தினார்.
இதனிடையே, போர்ச்சுகல் அணியில் மற்ற வீரர்கள் 33-ஆவது நிமிடம், 55-ஆவது நிமிடம், 90+2 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர்கள் கோல் அடித்தனர். இதனால், போர்ச்சுகல் அணியானது கோல் மழையை பொழிந்தது.
தொடர்ந்து போர்ச்சுகல் வீரர்கள் கோல் அடித்தாலும், சுவிட்சர்லாந்து சார்பில் 58-ஆவது நிமிடத்தில் மானுவல் அகான்ஜி ஒரு கோல் அடித்து தன் அணி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். மொத்தத்தில், நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 6-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
கால்பந்து உலகக் கோப்பை: மொராக்கோ செய்த வரலாற்று நிகழ்வு..