Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விக்ரம் அழைக்க, கார்த்தி மறுக்க, ஜெயம் ரவி ஏற்க..... அலப்பறையில் பொன்னியின் செல்வன் படக்குழு!

    விக்ரம் அழைக்க, கார்த்தி மறுக்க, ஜெயம் ரவி ஏற்க….. அலப்பறையில் பொன்னியின் செல்வன் படக்குழு!

    பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பாக அப்படத்தின் நடிகர்கள் பதிவிட்டுள்ள பதிவுகள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

    மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வம் திரைப்படம் உருவாகியுள்ளது. 

    இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இரு பாகங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதனை அடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதை மாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகள் சமூகவலைதளங்களில் பல நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். அவற்றில், சீயான் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை ஆதித்ய கரிகாலன் என்றும், நடிகை திரிஷா தன் ட்விட்டர் பக்கத்தின் பெயரை ‘குந்தவை’ என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.  மேலும், ஜெயம்ரவியும் தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை அருண்மொழி வர்மன் என மாற்றம் செய்துள்ளார். 

    இதையும் படிங்க: ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு – ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள்

    இந்நிலையில், விக்ரம் தன்னை ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் பொருத்திக்கொண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா! “ என்று பதிவிட்டுள்ளார். 

    இந்த பதிவுக்கு பதில் மொழி அளித்துள்ளார், கார்த்தி. அவர் தன்னை வந்தியத்தேவன் காதாப்பாத்திரத்தில் பொருத்திக்கொண்டு, “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me “ என்றார். 

    இதற்கு விக்ரம், “சரி தான்.‌இளைப்பாறு நண்பா. Detox. Rest. Recuperate. சில போர்களை தனியாக சென்று தான் வெல்ல வேண்டும்.  தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும்.  See you on the other side வந்தியத்தேவா. என்றார். 

    ஆனால், கார்த்தியாகிய வந்தியத்தேவன் தனது இளவரசன் மீது உள்ள பாசத்தால், ‘’என்னுடைய பாதுகாப்பு இல்லாமல் உங்களை எங்கும் அனுப்ப முடியாது இளவரசே.  அலுப்பாய் இருந்தாலும் நானும் வந்தே தீருவேன்.’’ என்று பதில் தெரிவித்துள்ளார். 

    இதற்கிடையில், அருண்மொழித் தேவனாகிய ஜெயம் ரவி, தனது ட்விட்டர் பக்கத்தில் “தம்பிவுடையான் படைக்கு அஞ்சான் இதோ நானும் வந்தியதேவனுடன் வந்து விடுகிறேன். என் அண்ணனை வீழ்த்தவும் வெல்லவும் யாராலும் இயலாது.‘’ என தெரிவித்துள்ளார்.  

    இவர்களின் இந்த பதிவு ரசிகர்களால் ரசிக்கப்பட்டும் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....