Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலர் தினம் கொண்டாட காசில்லை; ஆடு திருடிய இளைஞர்கள் கைது!

    காதலர் தினம் கொண்டாட காசில்லை; ஆடு திருடிய இளைஞர்கள் கைது!

    விழுப்புரத்தில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஆடு திருடிய 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

    விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் மலையரசன்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி ரேணுகா. இவருக்கு வயது 36. இவர் தனது பட்டியில் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். 

    இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதும் ரேணுகா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார். அப்போது அவரது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கடத்த முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகா திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். 

    இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த 2 இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். பிறகு, அவர்களை கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த மணிராம் மகன் அரவிந்த்குமார் என்பதும், மற்றொரு நபர் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் மகன் மோகன் என்பதும் தெரியவந்தது. 

    மேலும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு கையில் பணம் இல்லாத காரணத்தால், ஆட்டை திருடியதாக அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். 

    சிக்கிம் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....