Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்‘கடலுக்குள் பேனாவை வைத்தால், நான் உடைப்பேன்’ - சீமானின் பேச்சால் பரபரப்பு!

    ‘கடலுக்குள் பேனாவை வைத்தால், நான் உடைப்பேன்’ – சீமானின் பேச்சால் பரபரப்பு!

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனாவை கடலுக்குள் வைக்க, தமிழக அரசு முயற்சி எடுத்துள்ள நிலையில், ‘கடலுக்குள் பேனாவை வைத்தால், ஒரு நாள் வந்து நான் உடைப்பேன்’ என சீமான் பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.

    இந்த முயற்சிக்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தன. இந்நிலையில், நேற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட சீமான், நினைவுச்சின்னம் வைக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. கடலுக்குள் வேண்டாம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வரும். சின்னம் அமைக்க 8,651.13 சதுரமீட்டர் பகுதியை எடுத்து அங்கு கல், மண் கொட்ட வேண்டும். இதனால், அழுத்தம் வரும், பவளப்பாறைகள் பாதிக்கப்படும் என்று பேசியபோதே எதிர்ப்புகள் எழுந்தன. 

    இருப்பினும், இதைத்தொடர்ந்து சீமான் பேசினார். அப்போது, ‘கடலுக்குள் பேனாவை வைத்தால், ஒரு நாள் வந்து நான் உடைப்பேன் என்றும், அறிவாலயத்தில் அல்லது அவரது நினைவிடத்துக்குள் வைக்க வேண்டியதுதானே. சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடலுக்குள் பேனா சின்னம் வைப்பதை எதிர்க்கிறோம். நினைவுச்சின்னம் அமைப்பதை தடுத்து நிறுத்தும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். இது உறுதி’ என்றார். சீமானின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    நடுரோட்டில் பார்ட் பார்ட்டாக கழண்ட எலக்ட்ரிக் பைக்; வைரலாகும் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....