Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஎட்டாவது மாடியிலிருந்து குதித்த நோயாளி!! உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி!!

    எட்டாவது மாடியிலிருந்து குதித்த நோயாளி!! உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி!!

    கொல்கத்தாவின் முல்லிக் பஜார் பகுதியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் எட்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். மீட்புக் குழுவினரின் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

    சுஜித் அதிகரி என்னும் நோயாளி இன்று காலை (ஜூன் 25) கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் இன்று மதியம் இந்நிகழ்வு நடந்துள்ளது.

    மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுடன் ஏற்பட்ட தகராறினால் சுஜித் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த ஊழியர்களுடன் ஏற்பட்ட தகராறினையடுத்து சுஜித் மருத்துவமனையின் எட்டாவது மாடியிலிருந்த ஜன்னலின் வழியே வெளியே வந்துள்ளார்.

    எட்டாவது மாடிச் சுவற்றின் முனையில் அமர்ந்துகொண்ட சுஜித் கீழே விழும் மனநிலையில் இருந்ததினை அறிந்ததையடுத்து, மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

    மீட்புக் குழுவினர் ஏணிகள் பொருத்தி அருகில் செல்லும் போதெல்லாம் கீழே விழுந்து விடப்போவதாக சுஜித் மிரட்டியுள்ளார். இதனால் மீட்புக் குழுவினர் அவருக்கு அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவரது உறவினர்களும் முயன்று பார்த்தபோதும் மிரட்டியதால் சற்று பதட்டமான சூழ்நிலை அந்த பகுதியில் உருவானது.

    அவருக்கு தேவையான உணவுகள் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கீழ் உள்ள பகுதியானது வலைகள், காற்றடைத்த பைகள் கொண்டு மூடப்பட்டது. இதன் மூலம் சுஜித் கீழே விழுந்தாலும் பெரிய பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று மீட்புக் குழுவினர் எண்ணினர்.

    மீட்புக் குழுவினரால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே சுஜித், தான் அமர்ந்திருந்த எட்டாவது மாடி சுவற்றிலிருந்து தொங்க ஆரம்பித்தார்.

    சிறிது நேரம் மாடிச் சுவற்றினைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்த சுஜித், இறுதியாக பிடியினை விட்டுவிட்டு கீழே விழுந்தார். தரையினை அடையும் முன் அவரது உடலானது இரண்டு முறை மருத்துவமனைக் கட்டிடத்துடன் மோதியதால் அவரது தலை, இடுப்பு, இடதுகைப் பகுதிகளில் பலத்த அடிபட்டுள்ளது.

    மிகவும் காயமடைந்த நிலையில் சுஜித்தினை மீட்ட மீட்புக் குழுவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுஜித்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

    இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....