Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அடுத்த திரைப்படத்தின் பெயரை அறிவித்த பார்த்திபன்

    அடுத்த திரைப்படத்தின் பெயரை அறிவித்த பார்த்திபன்

    பார்த்திபன் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான், இரவின் நிழல். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில், வரலட்சுமி, பிரிகடா, ரோபோ சங்கர் போன்றோர் நடித்திருந்தனர். 

    இத்திரைப்படம் திரைத்துறை மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், பல விருது விழாக்களில் இரவின் நிழல் திரைப்படம் விருதுகளை குவித்தது. சிங்கிள் ஷாட் நான்-லினியர் திரைப்படம் என்ற பாணியில் உருவான இரவின் நிழல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

    இந்நிலையில், பார்த்திபன் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் பெயர் வெளிவந்துள்ளது. அதன்படி, ‘52-ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பை தன் அடுத்த திரைப்படத்திற்கு வைத்துள்ளதாகவும், அதற்கு மயிலிறகைப் போல வாழ்த்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து, வித்தியாசமனா முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் இத்திரைப்படத்தை எந்த விதத்தில் எடுக்கப் போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    விண்ணில் தெரியப் போகும் வால் நட்சத்திரம்; 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அற்புதம்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....