Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'அரசியலில் போலியானவர் ஓ.பன்னீர்செல்வம்' - விளாசிய நத்தம் விஸ்வநாதன்...

    ‘அரசியலில் போலியானவர் ஓ.பன்னீர்செல்வம்’ – விளாசிய நத்தம் விஸ்வநாதன்…

    அரசியலில் போலியானவர் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். 

    சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

    இந்தக் கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித்  தொடர்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

    இதனிடையே இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் பேசியபோது, “பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அதேபோல் அரசியலில் போலியானவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியில் இருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும்” என கூறினார். 

    இந்தக் கூட்டத்தில் வருகிற ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டப்பேரவை கூட்டம், எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் உள்ளிட்டவற்றை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    சீனாவில் தனிமைப்படுத்துதல் ரத்து – சுகாதார ஆணையம் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....