தனியார் மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து மருத்துவ கல்வி இயக்குனரகம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
தனியார் மருத்துவக்கல்லூரியில் இடங்களைத்தேர்வு செய்து சேரச் செல்லும் மாணவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது எனப் புகார் அடிக்கடி வருவதால் மருத்துவ கல்வி இயக்குனரகம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
ஆம், இந்தாண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த உடன் மாணவர்கள் கல்லூரிக்கான அனைத்து கட்டணங்களையும் சேர்த்து கலந்தாயின் பொழுதே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேகமாக பரவி வரும் ஓமைக்ரானின் புதிய வகை வைரஸ் – உலக நாடுகள் மீண்டும் அதிர்ச்சி!
மேலும், இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் நாரயணபாபு, மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவிடம் கட்டணத்தை செலுத்திய மாணவர்கள் அவர்களுக்குரிய ஒதுக்கீட்டு ஆணையை மட்டும் பெற்றுக்கொண்டு கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் . அந்தக் கட்டணத்தில் கல்வி கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் சேர்த்து வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.