Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'உயர்மட்ட தலையீடுகள்' அதிகம்.. நயன்தாரா - விக்னேஷ்சிவன் தம்பதியிடம் விசாரணை நடத்தப்படுமா?

    ‘உயர்மட்ட தலையீடுகள்’ அதிகம்.. நயன்தாரா – விக்னேஷ்சிவன் தம்பதியிடம் விசாரணை நடத்தப்படுமா?

    நயன்தாரா – விக்னேஷ்சிவன் தம்பதியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

    விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்தனர். திருமணம் முடிந்தப்பின் ஹனிமூன் சென்றுவிட்டு இருவரும் தங்களது பணிகளில் பிஸியாகினர். 

    நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இரட்டை ஆண் குழந்தைகள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என்று குறிப்பிட்டு இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார். 

    இருவரும் குழந்தைகளை தத்து எடுத்திருக்கலாம் என்று தகவல்கள் பரவ, வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை இவர்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும், வாடகைத்தாய் முறையென்றால் பல சட்டங்கள் உள்ளது அதையெல்லாம் அவர்கள் பின்பற்றினார்களா என்ற கேள்விகளும் சமூகவலைதளத்தில் பரவின. 

    இதைத்தொடர்ந்து, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் விதிமுறைகளின் படி குழந்தைகளை பெற்றார்களா? என்பது குறித்து 

    பொது சுகாதாரத்துறையின் சார்பில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: 66 குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கிய இருமல் மருந்து தமிழகத்தில் விற்கப்படுகிறதா?

    இந்நிலையில், அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் மீண்டும் நயன்தாரா – விக்னேஷ்சிவன் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ‘நயன்தாரா – விக்னேஷ்சிவன் வாடகைத் தாய் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பெற்ற உடன் அதில் விதிமீறல் இருக்கிறதா? முரண்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு நடவடிக்கை சட்டப்பூர்வமாக எடுக்கப்படும்’ என்று மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

    இந்நிலையில், டி.எம்.எஸ்., அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்ககத்துறையில் உள்ள அதிகாரிகள், நயன்தாரா விவகாரம் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் நயன்தாரா வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றதாக வெளியான தகவல் தொடர்பாக, மூன்று பேர்கொண்ட குழு ஒன்று  அமைத்து விசாரணை நடத்த, மக்கள் நல்வாழ்வு துறை அனுமதி அளித்துள்ளது. இக்குழு, நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் உரிய விதிமுறைகளை பின்பற்றிதான் குழந்தை பெற்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய விளக்கம் பெரும்.

    நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளின் விசயத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீடு அதிகமாகவே உள்ளதால், விசாரணை சம்பந்தமான எந்த தகவல்களையும் வெளியே கசியவிடக் கூடாது என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேரடி விசாரணை நடக்குமா என்பது பற்றி எந்த விஷயத்தையும் சொல்ல முடியாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....